Monday, April 27, 2009

சொர்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?

கும்பகோணத்திலே இருந்து தஞ்சாவூர் போய், அங்கே இருந்து மதுரை அழகர் கோயில் போகும் வழியில் கண்ட வயல்வெளிகள்.
அழகர் கோயில் செல்லும் பாதையில் எடுத்த படம் இது. வழியெல்லாம் என்ன குளுமை, என்ன குளுமை, கண்ணுக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும், உடலுக்கும் குளுமைதான்.

Friday, April 24, 2009

திருச்செந்தூரில் !

திருச்செந்தூர்க் கடற்கரை இது. வள்ளி குகையும், நாழிக்கிணறும் எடுத்த புகைப்படங்கள் எங்கேயோ போய் ஒளிஞ்சுட்டது. தேடித் தேடிப் பார்த்தாலும் கிடைக்கலை. :(. இந்தக் கடற்கரையின் அழகும் சரி, சமுத்திரத்தின் அழகும் சரி மற்றதில் இல்லை போல் ஓர் எண்ணம் எனக்கு. இங்கே அலைகள் அதிகம் கிடையாது. நிறையப் பேர் குளிச்சிட்டு இருந்ததாலே, கடற்கரையில் ஆட்கள் இல்லாமல் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப் பட்டது. பையர் தான் எடுத்தார் இதை.

ஹூஸ்டன் கடலும், அடுத்து இந்தியக் கடலும்

இது ஹூஸ்டன் கால்வெஸ்டனில் எடுத்தது. கடலும் சரி, கடற்கரையும் சரி, எனக்கு என்னமோ இந்தியா தான் அழகுனு தோணுது. யு.எஸ்ஸில் மற்றக் கடற்கரைகளைப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது தான். ஆனால் என்ன இருந்தாலும் இந்தியா இந்தியா தானே. அந்த அழகே தனி. அடுத்த போஸ்டில் பாருங்க திருச்செந்தூர்க் கடலும், கடற்கரையையும்.

Tuesday, April 21, 2009

இரண்டுக்கும் தெரியாமல் பிடிச்ச படம் இது!

ஹூஸ்டனில் இருக்கும்போது, அருகிலுள்ள ஊருக்குச் சென்றிருந்தோம். அங்கே உள்ள தோட்டத்துக் கிளிகள் இவை. படம் எடுக்கும்போது திரும்பிட்டது. வெட்கம் போல! என்னமாய்க் கொஞ்சுகிறது பாருங்க, இரண்டும்?? கீகீகீகீ னு கத்திட்டு இருக்கிறதைக் கேட்டாலே ஒரு சுகம்.

Saturday, April 11, 2009

குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சாச்சு!

மதுரையிலே கல்யாணம் முடிஞ்சு சாயங்காலமாய் வெள்ளி யானை வாகனத்தில் ஸ்வாமி வருவார். அது ரொம்ப விசேஷம் என்பதோடு, அதென்னமோ தெரியலை, யானை என்றாலே அழகர் யானை என்றே பாடுவாங்க ம்துரையிலே. சின்னக் குழந்தைகளை வைத்து விளையாட்டுக் காட்டும்போது கால்களில் உட்கார வைத்துக் குழந்தையின் தலையைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவாங்க, ஆனை ஆட்டம் என்றே அதுக்குப் பெயர். பாட்டோ இப்படி வரும்.

ஆனை, ஆனை,
அழகர் ஆனை,
குட்டி ஆனை,
கொம்பானை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம்
பார்க்க வாங்கோ!" என்று பாட்டுப் பாடிக் கொண்டே ஆனை ஆட்டுவாங்க குழந்தைகளுக்கு. இந்த ஸ்வாமி மலை கோயில் ஆனைக்குட்டிக்கும் கொம்பு முளைச்சிருக்கிறதைப் பார்த்ததும் அதான் நினைவு வந்தது!