Wednesday, May 13, 2009

வானரங்கள் கனி கொடுத்துக் கொஞ்சும்!

2007-ல் டிசம்பரில் அழகர் கோயில் போனப்போ அங்கே எடுத்தது இந்தப் படம். வானரக் கூட்டமே இருந்தது. எல்லாம் ஓடிப் போக இருந்தவை மட்டுமே கொடுத்த போஸ் இது!கீழே பாதையில் ஒரு வானரம் வந்து தைரியமாய் உட்கார்ந்து கொண்டு சாலையைக் கடக்க நேரம் பார்த்துட்டு இருந்ததுனு நினைக்கிறேன். கீழே ரயில் பாதை இருக்கும் படம் பழநி மலை மேல் செல்லும் ரயில் ஏறும் இடம். நாங்க போனப்போ விஞ்ச் இல்லை. ஆகவே மலைக்கு மேலே ஏற்றிச் செல்லும் இந்த ரயிலில் தான் செல்ல முடிந்தது. நடந்து போகத் தான் ஆசை. ஆனால் இரவுக்குள் எங்க அப்பாவின் ஊரான மேல்மங்கலம் போய்ச் சேரணும். ஆகையால் ரயிலில் சீக்கிரம் போகலாமேனு சிறப்புக் கட்டணத்துக்குப் பயணச் சீட்டு எடுத்தோம். அப்போ ஒரு நபருக்கு 50ரூ சிறப்புக் கட்டணம் ரயிலுக்கு. என்றாலும் ரயில் வருவதற்குப் பல மணி நேரங்கள் காத்துட்டு இருக்க வேண்டி இருக்கு. சிறப்புக் கட்டணம்னு வசூலிக்கிறாங்க. ஆனால் ரயில் பயணம் சிறப்பும் சரி, சாமானியக் கட்டணமும் சரி சேர்ந்து தான் பயணம் போக வேண்டி இருக்கு. சும்மா ஒரு பண வசூல் அரசாங்கத்துக்கு. கோயில்கள் அரசின் பிடியில் இருந்து விடுபட்டால் ஒழிய இதற்கு விமோசனம் இல்லை!
அதே நாள் நாங்கள் மேலே செல்லும்போது (2007 டிசம்பரில்) பழநியில் எடுத்தது இந்தப் படம். மலை மேல் செல்லும் ரயிலில் உட்கார்ந்து செல்லும்போது எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த ரயில் இது. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் பழநியிலே தான் சேருதுனு சொல்லுவாங்க இல்லையா? அந்த இயற்கை அற்புதம் போதாதுனு மனிதனால் உருவாக்கப் பட்ட இந்த ரயில் பாதையும், அதில் செல்லும் இந்த ரயிலும், பார்க்கப் பரவசம்! படம் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டித் தான் இருக்கு. கதவுகளை நன்றாய் மூடிடறாங்க. ஜன்னல் வழியே தெரியும் காட்சிதான் எடுக்க முடியும். அந்த மலை ரயில் போகும்போது வெளியே நின்னு எடுக்கிறது ரொம்ப ஆபத்தானது. என்றாலும் எடுக்க முடியலையேனு தான் இருக்கு!

2 comments:

  1. போன மாதம் குடும்பத்தோட பழநி போனோம்.நிறைய போட்டோ எடுத்தோம். ஆனால் இந்த மலை மீது செல்லும் போது எடுக்க வில்லை.

    அழகா இருக்கு.

    நன்றி.

    ReplyDelete
  2. வாங்க சூர்யா, ரொம்ப நன்றி, வந்ததுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete