Thursday, August 11, 2011

அழகிய நதிமகள் இவள்!

 
Posted by Picasa
இவள் சோகம் பெரிய சோகம். இப்போப் புதிய அரசு வந்ததும் நதியை, நீர்ப்பாசனக் கால்வாய்கள் போர்க்கால அடிப்படையில் தூர் வாருவதைக் கேள்விப் பட்டேன். அது குறித்து எழுதியும் இருந்தேன். ஆனால் அதெல்லாம் காவிரியின் வடகரைப்பக்கம் மட்டும் போலிருக்கு. கும்பகோணத்திலிருந்து கூந்தலூர் வழியாகக் கருவிலி செல்கையில் அரசலாற்றுக்கரையோடு தான் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் எப்படி இருந்த அரசலாறு? இப்போப் பாருங்க! நதியில் நீரே நடுவில் கொஞ்சம் போல் தான் தெரியுது. இரண்டு பக்கமும் ஆகாயத் தாமரை, வேறே ஏதோ செடிகள்! அவலமான நிலையில் அரசலாறு. :(((((( 
Posted by Picasa
இந்தப் பக்கம் கொஞ்சம் பரவாயில்லைனு நினைக்க வேண்டாம். மரங்கள் கவிழ்ந்து கரை ஓரம் தெரியுது இல்லையா? எல்லாமும் நதி தான். அதுக்கும் அந்தப் பக்கம் தான் கரையே. :(((((

2 comments:

  1. நதிகள்
    கால்வாயாகி
    வாய்க்காலாகி
    சாக்கடையாகி விட்டது.
    வேதனை தான்.

    ReplyDelete
  2. ஆமாம் ஐயா. மிக்க வேதனை தரும் நிகழ்வு கண்ணெதிரே நடந்து கொண்டே இருக்கிறது. :(((((

    ReplyDelete