இவர் தஞ்சை ரயில்வே ஸ்டேஷன்லே இருக்கார். என் கணவர் சொல்றதைப் பார்த்தால் ரொம்பவே வயசானவர் போல இருக்கு. அந்த அதிகாலையில் குருக்கள் வந்து தன்னந்தனியாக அவருக்கு எல்லா சிசுருஷைகளும் செய்து பாலபிஷேஹமும் செய்துவிட்டு அலங்காரமும் செய்ததைப் பார்த்துக் கொண்டே நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தோம்.முழு அலங்காரத்தோடு கீழே பார்க்கலாம்.
Thursday, March 29, 2012
Sunday, March 25, 2012
பூப் பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம்!
ஹூஸ்டன் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பூச்செடிகள் வசந்த கால ஆரம்பத்திலே பூத்திருந்த சில பூக்களுடன். இன்னும் முழுதாகக் குளிர் போய் இலைகளில் துளிர்களோ, அல்லது சின்னஞ்சிறு செடிகளில் பூக்களோ பூக்க ஆரம்பிக்கவில்லை.
எனினும் ஒரு சில செடிகள் அவசரக் குடுக்கையாகப் பூத்திருந்தன. அவற்றில் இரண்டு. சின்ன வயசில் கீழ்க்கண்ட பாடலைப் பாடி இரண்டு பேர் எதிரும் புதிருமாகக் கை கோர்த்து நிற்க, இன்னொருவர் அதற்குள்ளாக நுழைந்து வரவேண்டும். நுழையும் பெண் எதிர்பாரா சமயம் இருவரும் அவரைக் கைகளுக்குள்ளாகப் பிடித்தால் ஆட்டத்தில் அந்தப் பெண் அவுட். பிடிக்க முடியலைனா கை கோர்த்தவர்கள் இருவரும் அவுட்.
பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்
இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்
கை கோர்த்திருக்கும் இருவரும்
என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?
இனி ஒவ்வொரு பூவாக வரும்
சாமந்திப் பூ
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??
எனினும் ஒரு சில செடிகள் அவசரக் குடுக்கையாகப் பூத்திருந்தன. அவற்றில் இரண்டு. சின்ன வயசில் கீழ்க்கண்ட பாடலைப் பாடி இரண்டு பேர் எதிரும் புதிருமாகக் கை கோர்த்து நிற்க, இன்னொருவர் அதற்குள்ளாக நுழைந்து வரவேண்டும். நுழையும் பெண் எதிர்பாரா சமயம் இருவரும் அவரைக் கைகளுக்குள்ளாகப் பிடித்தால் ஆட்டத்தில் அந்தப் பெண் அவுட். பிடிக்க முடியலைனா கை கோர்த்தவர்கள் இருவரும் அவுட்.
பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்
இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்
கை கோர்த்திருக்கும் இருவரும்
என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?
இனி ஒவ்வொரு பூவாக வரும்
சாமந்திப் பூ
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??
Friday, March 23, 2012
ஓடும் மேகங்களே, ஒரு சொல் கேளீரோ!
Subscribe to:
Posts (Atom)