உம்மாச்சி காப்பாத்தும்மா.
Sunday, December 12, 2010
Tuesday, November 30, 2010
கார்த்திகை தீபத் திருவிழா!
போன வருஷம் எடுத்த படம் இது. கார்த்திகைக்குப் போன வருஷம், பையர், மருமகள் எல்லாரும் இருந்தாங்க. அப்போ விளக்கு ஏத்தினதும் நிவேதனம் பண்ணிட்டு எடுத்த படம். அதான் நிவேதனம் எல்லாத்தையும் எடுத்து வைச்சாச்சு. ஹிஹிஹி. இந்த வருஷம் படம் எடுக்கிற மனநிலையில் இல்லை. சும்ம்ம்ம்மா விளக்கு ஏத்தினோம். போன வருஷ நினைவுகளோட இருந்தது தான் நிஜம்.
Sunday, September 19, 2010
சீதா கல்யாணமே வைபோகமே!
Saturday, September 4, 2010
ஆறு வித்தியாசங்களைச் சொல்லுங்க!
Friday, September 3, 2010
தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்!
Friday, August 6, 2010
நாரத்தையா, சாத்துக்குடியா??
இப்போப் பூத்துக் காய்ச்சிருக்கு. மனசெல்லாம் சந்தோஷம். நேத்தே இதைப் பகிர்ந்துக்கணும்னு நினைச்சால் கூகிள் தடை போட்டுப் பழிவாங்கவே அதிலே நேரம் போயிட்டது.
வழிமுறை: சந்திர கிரஹணத்தின் போது இரவில் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறு பெண்களை விட்டு மரத்தின் வேரில் செருப்பால் அடிக்கச் செய்வார்கள். அதன் பின்னர் புட்டு செய்து மரத்துக்குப் படைத்து நிவேதனம் செய்வார்கள். இப்படிச் செய்தால் காய்க்காத மரம் பூத்துக் காய்க்கும் என்பது நம்பிக்கை.
Monday, July 26, 2010
அழகான அரசலாறு அலங்கோலக் காட்சியில்!
வேலைக்கு உணவு திட்டத்தில் வேலை வாங்கிட்டு உணவும், பணமும் கொடுக்கிறதாய்ச் சொல்லும் கிராமப் பஞ்சாயத்து அலுவலர்களோ, அல்லது அரசு அதிகாரிகளோ இந்த வேலையும் ஒரு வேலைதான் என்று கணக்கிலேயே எடுத்துக்கமாட்டாங்களா? இது முக்கியமில்லையா? எனக்குத் தெரிஞ்சு ஆற்றில் தண்ணீர் ஓடிப் பார்த்திருக்கேன் என்றால் இப்போக் கடந்த முப்பது வருடங்களாக இப்படி வறண்ட ஆற்றையே பார்க்கிறேன். இது என்ன நியாயம்? இது என்ன அலட்சியம்? ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும்போதெல்லாம் இதை எல்லாம் பார்க்கப் பார்க்க மனசும், உடம்பும் கொதிக்கிறது தான் மிச்சம். இதிலே விவசாய நிலங்களை எல்லாம் வீடுகள் கட்டவேண்டி ஒதுக்கிட்டும் வராங்க. விவசாயம் இல்லைன்னா எப்படிச் சாப்பிடப் போறோம்? இது கிராம மக்கள் அவங்களாவே தங்களுக்குள்ளாக செய்து கொள்ளவேண்டிய ஒரு வேலை. அதை எடுத்தாவது சொல்லலாமே?
Subscribe to:
Posts (Atom)

