Saturday, January 5, 2013

தென்னை மரத்தோப்பினிலே




வீட்டருகே இருக்கும் தென்னைமரங்களின் பின்னணியில் காவிரியில் ஓடும் சிறிதளவு நீர்.

Sunday, December 9, 2012

இனிக்கும் இனிய காலையும், மயக்கும் மாலைப் பொழுதும்!


ஸ்ரீரங்கம் வீட்டில் காலை நடைப்பயிற்சிக்குச் செல்கையில் உதயசூரியனின் பொன்னிறக் கிரணங்களைப் பார்க்கையில் தினம் படம் எடுக்கச் சொல்லும்.  ஒரு நாள் முயன்றது இது.





இது ஒரு மயக்கும் மாலைப் பொழுதில் கருமேகங்கள் சூழக் காட்சி அளித்த வானம். கடலில் நீந்தும் நீர் வாழ் ஜந்துக்களைப் போன்ற தோற்றம் கிடைக்க க்ளிக்கினேன். 

Sunday, December 2, 2012

கார்த்திகை தீபம் எங்க குடியிருப்பில்!


எங்க குடியிருப்பில் எதிர் வீடுகளில் கலர்க்கோலங்கள் போட்டு தீபங்களை வைத்திருந்த காட்சி. 

Friday, October 12, 2012

சூரியக் கொண்டாட்டம்!


இரண்டு நாட்களாக ரயிலில் வந்தப்போ, மாலைச் சூரியனைப் பார்த்ததும் செல்லினேன்.  சுமாரா வந்திருக்குனு நினைக்கிறேன்.  எது என்னிக்கு எடுத்ததுனு பார்த்துக் கண்டு பிடிச்சுக்குங்க. :))))




Thursday, July 5, 2012

நிலா நிலா ஓடி வா, நில்லாமலே ஓடி வா!

முந்தாநாள் பெளர்ணமி அன்னிக்கு நிலாவைத் தான் என் கையிலே பிடிச்சேன்னு பாடிட்டே படம் எடுத்தேன்.  முதல்லே வெளிச்சம் இருக்கிறச்சே ரெண்டு, மூணு எடுத்துட்டு, அதிலே கொஞ்சம் சுமாரானதைப் பகிர்ந்திருக்கேன்.


அடுத்துக் கீழே இறங்கறச்சே நல்லா இருட்டு வந்தாச்சு.  அப்போ ஒண்ணு எடுக்கலாம்னு ஒண்ணே ஒண்ணு எடுத்தேன்.  அது கீழே.


Wednesday, May 9, 2012

காவேரி தான் சிங்காரி; சிங்காரி தான் காவேரி


கண்ணால் கண்டவள் சிங்காரி; கருத்தில் நின்றவள் காவேரி. வீட்டின் பின் பக்கம் இருக்கும் வளைந்து வரும் காவிரி. மேற்கே இருந்து வளைந்து வருகிறது. அகண்ட காவிரி. இங்கே அம்மாமண்டபம் அருகே!
சலசலவெனத் தண்ணீர் கொஞ்சம் போல் போனாலும் குளிக்க வரும் மக்கள் கூட்டம் நிறையவே. சித்ரா பெளர்ணமி அன்று கஜேந்திரன் இங்கே மோக்ஷத்தைப் பெற்றுக் கொண்டார். அதுகுறித்த படங்கள் விரைவில். ஆனால் சுவாமி தெரியாமல் இருட்டு; எல்லாரும் மறைக்கிறாங்க. ஆகவே சுவாமி சரியாகத் தெரியவில்லை. பல படங்கள் எடுத்தும் எல்லாத்திலேயும் இப்படியே! :((((
Posted by Picasa