Thursday, March 21, 2013

மயிலே, மயிலேன்னா இறகு போடுமா?


திருவானைக்காவல் கோயில் கோபுரத்தில் உட்கார்ந்திருந்த மயிலைக் காமிராவில் சார்ஜ் இல்லாததால் செல்லினேன்.  வந்த வரை போட்டிருக்கேன். தொ.நு.நி. குற்றம், குறை தவிர்க்க! :))))))




Wednesday, January 30, 2013

நண்பருக்கு நல்வரவுடன் தொடக்கம்.

இப்போ சமீபத்திய ஊர் சுற்றலில் எடுத்த படம் இது.  எங்கே என்பதைப் பின்னர் பகிர்ந்துக்கறேன். எங்கே போனாலும் நம்ம நண்பர் மாட்டினால் அவரைப் படம் எடுக்காமல் விடறதில்லை.

Friday, January 25, 2013

நானொரு வாயில்லாப்பூச்சிங்க!

போன வாரத்தில் ஓர் நாள் பால்கனியைச் சுத்தம் செய்கையில் பச்சையாய்ப் ப்ளாஸ்டிக் கவரின் நுனி மாதிரி ஏதோ இருக்கவே அதைத் தள்ளி விட்டேன். அதுவோ பறக்க ஆரம்பித்தது.  கவரும் பறக்கும் தான். ஹிஹி, ஆனால் இதுக்குக் கண்ணு, மூக்கு இருக்கவே அது திரும்ப உட்காரும் வரை பொறுத்திருந்து விட்டுக் காமிராவிலே பிடிச்சேன்.  அதான் மேலே.


படம் எடுக்கறேனு தெரிஞ்சதும் மறுபடி பறக்க ஆயத்தம்! :)

Saturday, January 5, 2013

தென்னை மரத்தோப்பினிலே




வீட்டருகே இருக்கும் தென்னைமரங்களின் பின்னணியில் காவிரியில் ஓடும் சிறிதளவு நீர்.

Sunday, December 9, 2012

இனிக்கும் இனிய காலையும், மயக்கும் மாலைப் பொழுதும்!


ஸ்ரீரங்கம் வீட்டில் காலை நடைப்பயிற்சிக்குச் செல்கையில் உதயசூரியனின் பொன்னிறக் கிரணங்களைப் பார்க்கையில் தினம் படம் எடுக்கச் சொல்லும்.  ஒரு நாள் முயன்றது இது.





இது ஒரு மயக்கும் மாலைப் பொழுதில் கருமேகங்கள் சூழக் காட்சி அளித்த வானம். கடலில் நீந்தும் நீர் வாழ் ஜந்துக்களைப் போன்ற தோற்றம் கிடைக்க க்ளிக்கினேன். 

Sunday, December 2, 2012

கார்த்திகை தீபம் எங்க குடியிருப்பில்!


எங்க குடியிருப்பில் எதிர் வீடுகளில் கலர்க்கோலங்கள் போட்டு தீபங்களை வைத்திருந்த காட்சி. 

Friday, October 12, 2012

சூரியக் கொண்டாட்டம்!


இரண்டு நாட்களாக ரயிலில் வந்தப்போ, மாலைச் சூரியனைப் பார்த்ததும் செல்லினேன்.  சுமாரா வந்திருக்குனு நினைக்கிறேன்.  எது என்னிக்கு எடுத்ததுனு பார்த்துக் கண்டு பிடிச்சுக்குங்க. :))))