Friday, December 31, 2010

நீலவானம், பச்சைவயல், கறுப்பு சாலை!

 
Posted by Picasa
காரிலே போகும்போது தெரிந்த ஒரு காட்சியைப் படம் பிடிக்க நினைத்தால் காரின் வேகத்துக்கு என்னால் ஈடுகட்ட முடியலை. என்றாலும் இயன்றவரையில் நீலவானப் பின்னணியில் பச்சை வயல்களும், அதிலே கருநீலப் பின்னணியோடு கூடிய சாலையையும் ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான் எடுத்திருக்கேன்.

வாத்தியார் வந்து என்ன சொல்லப் போறாரோ? வலது ஓரத்திலே எதுவோ தெரியுது! எப்படி வந்ததுனு தெரியலை!

Thursday, December 30, 2010

காய்களால், பழங்களால் அலங்காரம்!

பழங்கள், காய்களால் அலங்கரிக்கப்படும் சிதம்பரம் கோயிலின் கீழ வாசல். நடராஜர் என்னமோ தெற்கே பார்த்துட்டு இருந்தாலும் கீழவாசல் வழியாக வெளியே வந்து தேருக்குப் போவதாலும், அதே வாசல் வழியாக உள்ளே நுழைவதாலும் இதுவே பிரதான வாயிலாக அலங்கரிக்கப் பட்டது. எல்லா கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் தோரணங்கள் தொங்கினாலும் கீழவாசலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். இதைத் தவிர மற்ற நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தடா! :(

Monday, December 27, 2010

ஸ்ரீ ரமணாஸ்ரமம், திருவண்ணாமலை!


பகவான்

நவராத்திரியின் போது திடீர்ப் பயணமாகத் திருவண்ணாமலைக்கு ஒருநாள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அங்கே ஸ்ரீரமணாஸ்ரமம் மட்டும் போனோம். சுற்றுலாக் குழுவோடு சென்றதாலும் செல்லும்போதே மூன்று மணி ஆகிவிட்டதாலும் மற்ற ஆசிரமங்கள் போக முடியலை. கிரிவலப் பாதையில் முதலில் வந்தது ஸ்ரீரமணாஸ்ரமம். அவங்க அநுமதியோடு எடுத்த சில படங்கள் இங்கே ஒவ்வொன்றாய்க் காணலாம்.
தியான மண்டபம்.
பகவான் அண்ணாமலைக்கு வந்தபோது சிறுவனாக இருந்த நிலையில் எடுத்த ஓவியப் படம்.
தியானம் செய்யும் பெரிய கூடம்.

Sunday, December 12, 2010

உம்மாச்சி காப்பாத்தும்மா! :)

உம்மாச்சி காப்பாத்தும்மா.

Tuesday, November 30, 2010

கார்த்திகை தீபத் திருவிழா!


போன வருஷம் எடுத்த படம் இது. கார்த்திகைக்குப் போன வருஷம், பையர், மருமகள் எல்லாரும் இருந்தாங்க. அப்போ விளக்கு ஏத்தினதும் நிவேதனம் பண்ணிட்டு எடுத்த படம். அதான் நிவேதனம் எல்லாத்தையும் எடுத்து வைச்சாச்சு. ஹிஹிஹி. இந்த வருஷம் படம் எடுக்கிற மனநிலையில் இல்லை. சும்ம்ம்ம்மா விளக்கு ஏத்தினோம். போன வருஷ நினைவுகளோட இருந்தது தான் நிஜம்.

Sunday, September 19, 2010

சீதா கல்யாணமே வைபோகமே!

தூர்தர்ஷன் பாரதியில் தியாகராஜர் பற்றிய வரலாறு ஒரு டாகுமெண்ட்ரி காட்டிட்டு வராங்க. அநேகமா முடிஞ்சிருக்கும்.அப்புறமாப் பார்க்க முடியலை! கடைசியாப் பார்த்தன்னிக்குப் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளும், அதிலே சாதிஞ்சனே பாட்டின் சரணத்தில் வரும் மாற்றம் பற்றியும் சொல்லிட்டிருந்தாங்க. தியாக ராஜர் பாடிய சில குறிப்பிட்ட பாடல்களையும், அது பாடப்பட்ட நேரங்களையும் நாட்டிய நாடகமாய்க் காட்டறாங்க. ஆடியது தனஞ்சயன், சாந்தா தனஞ்சயன் குழுவினர். கேட்கணுமா ஆட்டத்துக்கும் பாட்டத்துக்கும். அப்போ ஒரு நாள் இந்த "சீதா கல்யாணமே வைபோகமே" பாடலுக்கான காட்சிகளை சீதா கல்யாணமாக் காட்டினப்போ ராமராகவும், சீதையாகவும் ஆடினவங்க ஆடின ஆட்டம் ரொம்ம்ம்ம்ம்ம்பவே நல்லா இருந்தது. அதில் இருந்து சில காட்சிகளை இங்கே பார்க்கிறீங்க. இது மாலை மாற்றும் காட்சி.
சீதை ராமருக்கு மாலை போடுகிறாள். அதுக்கு முன்னாடி ஒரு ஆட்டம் ஆடறாங்க பாருங்க. வீடியோ காமிரா இருந்தால் வீடியோவா எடுத்துப் போட்டிருக்கலாமேனு தோணிச்சு. அவ்வளவு அழகு!
மறு ஒளிபரப்பாவும் மறுநாள் காலம்பர நாலு மணியிலே இருந்து போட்டாங்க. ஹிஹிஹி, நாலு மணிக்கானு கேட்கறீங்களா?? நாலு மணிக்குத் தான் எழுந்துடுவேனே. உடம்பு சரியில்லைனால் கூட எழுந்துடுவேன். ரொம்ப மோசமாப் போய் அதுக்காக எடுத்துக்கும் இந்த மருந்து, மாத்திரைகள் தாக்கத்தால் தான் இப்போ ஒரு வாரமா ஐந்தரை மணி ஆயிடுது! :(

Saturday, September 4, 2010

ஆறு வித்தியாசங்களைச் சொல்லுங்க!

எப்புடி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன்! :)))) கண்டு பிடிங்கப்பா ஆறு இல்லை, ஏழு, எட்டு, பத்து வித்தியாசங்களை. கீழே இருக்கிறது திவா சுத்தம் செய்து அனுப்பினது. மேலே இருப்பது நம்ம அமெச்சூர் ஒரிஜினல்.