
இதோ தெரியுதே, இதான் கொடைக்கானல் மலை. இரவிலே நல்ல மின்விளக்கு வெளிச்சங்களோட தெரியும். மலை அடிவாரத்திலே தான் எங்க ஊர் இருக்கு. பக்கத்திலே பெரியகுளத்திலே இருந்து நடந்தே மேலே ஏறலாம். அங்கே இருந்து கொஞ்ச தூரத்தில் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் ரொம்ப பிரசித்தி. அங்கே கொடைக்கானல் மலையிலிருந்து கீழே வரும் மஞ்சளாறு தண்ணி ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும், தண்ணீரே குடிச்சாப்போதும்கற மாதிரி சுவையான சுவை. மஞ்சளாறு இறங்கி வர இடத்திலே தான் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் கோயில், மூங்கிலணை காமாக்ஷினும் சொல்லுவாங்க. கதவுக்குத் தான் பூஜை, வழிபாடுகள், மாலை, மரியாதை, அர்ச்சனைகள், தீபாராதனை எல்லாம். மூலஸ்தானத்தை இது வரை திறந்து பார்த்தவங்க இல்லை. அங்கே கூரை மாத்தறதுக்குக் குறிப்பிட்ட நாயக்கர் வம்சத்தாரின் கனவில் அம்மன் வந்து சொன்னதும், கண்ணைக் கட்டிக்கொண்டு ஏணி வழியா மேலே ஏறிக் கூரை மாத்துவாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை அப்படிக்கூரை மாத்தினாங்க. அப்புறமா மாத்தினதா நாங்க போனப்போ பூசாரிகள் சொன்னாங்க. இங்கே அர்ச்சனை, ஆராதனை வழிபாடுகள் செய்யறவங்க கர்நாடகாவின் போத்திகள் பரம்பரையைச் சேர்ந்தவங்கனு சொல்றாங்க. கோயிலைப் படம் எடுக்க முடியாது. அநுமதி இல்லை. அதோடு சுற்றுப் புறமும் எடுத்தது எங்கேனு தேடணும். கிடைச்சால் போடறேன்.

என்னோட பெரியப்பா பையர் வீடு. கெமிகல் இஞ்சினியரிங் முடிச்சுட்டு,கிராமத்திலே விவசாயம் பண்ணிட்டு இருககார். என்னோட அப்பாவின் நிலங்களும், இவங்க அப்பா இருந்தவரைக்கும் அவர் தான் பார்த்துட்டு இருந்தார். பின்னால் என்னோட அப்பா விற்றுவிட்டார். இப்போ ஏதோ புஞ்சைக்காடு இருக்குனு சொல்றாங்க. அதை யாரோ குத்தகைக்கு எடுத்துட்டு ஒண்ணும் கொடுக்கிறதில்லைனும் கேள்வி. வீடு ஒண்ணு இருக்கு எதிர்ப்பக்கம். அதைப் படம் எடுத்தது, எங்கேனு காணோம், தேடிட்டு இருக்கேன். கறுபபா, இதோட பின்னூட்டத்தை யாருக்கானும் அனுப்பிட்டு என்னை எல்லாரும் திட்டப் போறாங்க! காப்பாத்துப்பா!