Monday, March 14, 2011

அறுவடை செய்ய வாங்க!

 
Posted by Picasa
கும்பகோணத்திலே இருந்து பரவாக்கரைக்கு வரும் வழி. வழிலே பொய்யாப் பிள்ளையார் கோயிலுக்குக் கொழுக்கட்டை நிவேதனம் செய்துட்டு ஊருக்குள் நுழையும் வழியில் கண்ட வயல்கள். முழுசாய்க் கதிர்கள் வந்து அறுவடைக்குக் காத்திருக்கும் நேரம். எல்லாம் தலை சாய்ந்து கிடப்பதைப் பார்க்கலாம். அதோ தூரத்தில் தெரியுதே, அதான் சிவன் கோயில். மாசிலாமணீஸ்வரர். திருமூலர் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறதா ஒரு ஆய்வு சொல்லுது. கோயில் நாங்க போனப்போ திறக்கலை. :( இந்தக் கோயிலை முழுதும் இடிந்த நிலையிலேயே பல வருடங்கள் பார்த்திருந்தேன். இப்போத் தான் பத்து வருஷம் முன்னாடி திருப்பணி செய்து கும்பாபிஷேஹம் செய்தாங்க. ஆனாலும் இன்னமும் ஈசனைக் கவனிப்பாரில்லை. எப்போ விடியும்னு பார்த்துட்டு இருக்கோம்! :(

No comments:

Post a Comment